செவ்வாய், 6 ஜூன், 2017

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கு போல ஆகினார் !! நரேந்திரர் !!




ஆப்பசைத்த குரங்கு போல ஆகினார் !!

நரேந்திரர் !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்.
அந்தக்காலத்தில் வாழ்ந்திருந்த பட்டினத்தார் வாழ்க்கை  வரலாற்றில்இடம்பெற்றபாடலிது :-



நாப்பிளக்க பொய் உரைத்து !!நவ நிதியும் தேடி !!நலன் ஒன்றுமே அறியா !!நாரீயரைக் கூடி பின் !!பூப்பிளக்க வந்துதித்த !!புற்றீசல்போல !!புலுபுலென கலகலவென !!புதல்வர்களைப் பெறுவீர் !!காப்பதற்கும் வகை அறியீர் !!கைவிடவும் மாட்டீர் !!கவர்பிளந்த மரத்தினிடை !!                                           கால்  நுழைத்துக்கொண்டே !!
ஆப்பதனை அசைத்து விட்ட !!
குரங்கதனைப் போலவே !!
அகப்பட்டீர் !! அகப்பட்டீர் !!
கிடந்தது உழல !!
அகப்பட்டீர் !!

இந்தப் பாடல், ஒரு திருமணம் முடித்து
வருகின்ற புதுமணத்தம்பதிகளைப்பார்த்து
பட்டினத்தார் ஆசி வழங்குவதுபோல அந்த
இடத்தில், இந்தப்பாடல் வருகின்றது.

பாடலின் பொருள் :-

பேசுகின்ற பொய்யில், நாவே பிளந்து போய்விடுமாம்.
அப்படி பேசினால்தான் மட்டுமே ஒன்பது வகையானசெல்வங்கள் வந்து சேர்ந்திடுமாம். அப்படி செல்வங்கள்சேர்த்திட்ட ஆண்மகன் உடனே என்ன செய்திடுவான்
என்று கேட்டால், தனக்கு மனைவியாக வருகின்றவளால் தனக்கு நல்லது
நிச்சயம் நடக்காது அப்படி நல்லது நடந்திட வேண்டும்என்று அறிந்திடாத எண்ணம் பிறவியிலே உள்ள பெண்களில்
ஒருத்தியை திருமணம் செய்து சீரழிந்து வாழ்விலே நொந்து நூலெனவேபோவானாம்.
அப்படி திருமணம் செய்ததன் விளைவு, மழைக்கு முன்பாகவருகின்ற ஈசல் கூட்டங்கள் போல குழந்தைகளை பெறுவானாம்.
அவைகளைக் காப்பாற்றிடவும் இவனுக்கு வழிவகைகள்தெரியாதாம். ஆனாலும் அதற்காக அந்தப் புள்ளைகளைக் கைவிடவும்மாட்டானாம் கைவிடவும்முடியாதாம். இதற்கு பாடலை எழுதியபுலவர் பெருந்தகையீர் கொடுத்த உதாரணம்தான் இங்கேகுறிப்பிடுதற்கு உரியது. அது என்னவென்று கேட்டால் ,
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
10 அடி, 15 அடி விட்டம் உள்ள அறுபது அடி முதல் எண்பது, தொண்ணூறு அடி வரை உயரம் கொண்ட மரங்களை கேரளா போன்ற மலைதேச மாநிலங்களில் காண முடியும்.
அப்படிப்பட்ட உயரங்கொண்ட மரங்களை காலைமுதல் மாலை வரை தொழிலாளர்கள், நடுவில்ரம்பம் கொண்டு அறுத்து பின்னர் வேலை முடிந்து அயர்ச்சிகாரணமாக நாற்பது அடி நீள, ஐம்பது அடி நீளமுள்ள
மரங்களில் பாதி அறுபட்ட பிறகு, மீண்டும் காலையில் பணிக்கு வந்து அறுத்திடும் வேலையை பார்த்திட இருப்பதால்,அந்த அறுபட வேண்டிய இடத்தினை குறிக்க மரத்தால் செதுக்கப்பட்டகுச்சி ஒன்றினை ( இதன் பெயர் " ஆப்பு "என்று சொல்வார்கள்)பிளந்த இடத்தில் ஓங்கி அடித்து வைத்து விட்டு, தொழிலாளர்கள்கீழே இறங்கி வேலையை முடித்து வீடு செல்வது வழக்கம்.
இந்த அறுவை வேலைகள் நடைபெறுகின்ற இடத்திற்கு அருகில்உள்ள  மரத்தில் உயரத்தில், அமர்ந்து இருந்த குரங்கு ஒன்று இந்தஅனைத்து இவர்கள்நடவடிக்கைகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, இரண்டாக, பிளவுபட்ட மரத்திற்கு நடுவில் ஒருகாலையும், வெளிப்புறம் மற்றுமொரு காலையும் வைத்துதொங்க விட்டுகொண்ட பின்பு , இந்தக் குரங்கு என்ன செய்திடுமாம் என்று கேட்டால், ஆப்பு இலேசாக அசைத்திடமுற்படும். அதனது தீவிர முயற்சியின் பயனாக, இலேசாகஅந்த ஆப்பு அசைய ஆரம்பிக்கும். பிறகு ஒரு கால கட்டத்தில்ஓங்கி இழுத்து தனது முழு பலத்தையும் அந்த ஆப்பின் மீதுகாண்பிக்க, ஆப்பு, மரத்தினின்று குரங்கின் கைகளுக்குவந்து விடும். ஆனால், இப்போது அதன் ஒரு கால், மரத்தில்இடையே சிக்கிக்கொண்டு குரங்கு கத்த ஆரம்பிக்கும். இரவுநேரம் முழுதும் கத்தி கத்தி, அலறி,அலறியே குரங்கு உயிர் பிரியுமாம். இது திருமணம்செய்தபுதுமணத்தம்பதிகளுக்குபட்டினத்தார் சொல்லிய கருத்து.

ஆனால், நான் இதே கருத்தை, சற்றே மாற்றியபடி, நரேந்திரர்அவர்கள் குரங்காக செயல் பட்டு, அஇஅதிமுக கட்சியைஇரண்டாக பிளவு படுத்தி அதனை தனது வசம் கொண்டு வந்துபின்வாசல் வழியே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிடஆரம்பம் முதலே பன்னீர் செல்வத்தை மிரட்டிப் பார்த்தார்.பலன்வகிட்ட வில்லை.வளைந்து கொடுத்தார். பிறகு பன்னீரிடம் விஷயம்எதுவுமில்லை என்று அறிந்திட்ட, நரேந்திரர், எடுபிடிபழனிச்சாமியை தனது பிடிக்குள் வைத்து அரசியல் செய்திடமுயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றி பெற்றுவிடும் என்றசூழலில், இங்கே ஜெயிலில் இருந்த திரு. TTV தினகரன் மூன்று தினங்களுக்கு முன்பாக பெயிலில்வெளியேவர, அவரிடம் அவரதுஆதரவுபெற்றசட்டமன்றMLAக்கள்சந்திப்பு நேற்றுமுதலாக நிகழ்ந்து வருது. இப்போது 30 MLAக்கள் தினகரன் பக்கம்வந்தாகிவிட்டது. மோடியின் கனவிலே ஆண்டவன் ஆப்பு வைத்துவிட்டான். இப்ப என்ன செய்வார் நரேந்திரர் ?

இதுதான் கேள்வி இப்போது.
எது எப்படியோ, தமிழ்நாட்டு அரசியல், ஒரு தெளிந்த நீரோடைபோலத்தான் இதுவரை இருந்தது. இனிமேல் என்ன நடக்கும்
என்பது பார்ப்போம்.

நன்றி. வணக்கம்.

அன்புடன்.

கவிஞர் மதுரை தி.இரா.பாலு.



ஞாயிறு, 28 மே, 2017

சாகடிச்ச வாய்க்கு சர்க்கரைப்பொங்கல் தந்த கதையால்ல இருக்குது !! மோடியின் கூற்று !!




சாகடிச்ச வாய்க்கு !!
சர்க்கரைப்பொங்கல் தந்த !!
கதையால்ல இருக்குது !!
( மோடியின் கூற்று !! )

அன்பு மிகுந்த தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த மாலை நேரத்து வணக்கம்.

விடிந்தால் இந்த நாட்டினில் வாழ்ந்துவருகின்ற சிறுபான்மையினரில் ஒரு பெரும்பகுதியான இஸ்லாமியர்கள் தங்களது ஐந்து கடமைகளுள் ஒன்றாகிய " புனித ரம்ஜான் நோன்பு " வைத்திட (முப்பது நாட்கள்) ஆரம்பிக்கின்ற நாள்.

நமது ஒன்றுபட்ட இந்தியத்திருநாட்டின் பலமே எதில் இருக்கின்றது கேட்டால், அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

" வேற்றுமையில் ஒற்றுமை "

அப்படித்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை நமக்கு வகுத்துத் தந்திட்ட அம்பேத்கார் சொல்லிச்சென்றார். 

இதன் உட்பொருள் என்ன என்று கேட்டால், அது இதுதான் :-

பல்வேறு சமயங்கள்,பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்கள், அதில் பல்வேறு ஜாதிகள் என்று ஆயிரம் ஆயிரம் பிரிவுகள் வாழ்ந்து வருகின்றதுதான் நமது ஏக இந்தியத்திருநாடு என்பது. இந்தத்திருநாடு ஒரு பொழுதும் ஒரு சமயத்திற்கு சொந்தமானது அல்லவே அல்ல. அதனால் மட்டுமே அரசியல் அமைப்பு சட்டம் வகுத்து தந்த மாண்பிற்கு  உரிய டாக்டர்.அம்பேத்கார்இந்து, இஸ்லாமிய, கிருத்துவ,புத்த, இன்ன பிற.. சாதி சமயத்தை சார்ந்த சமுதாயங்களுக்கு சாதகமாக, அவரவர்கள் விருப்பப்படி தனித்தனி சட்டங்கள் வைத்துக் கொள்ள அனுமதியளித்து, இது தவிர பொது சிவில் சட்டம் என்றும் இயற்றி அதனை இந்துக்களாகிய நாம் பயன்படுத்திட வழிவகை செய்திடும் வண்ணம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை  இயற்றி அதன் அடிப்படையில் மட்டுமே நமது இந்தியத்திருநாடு சுதந்திரம் பெற்ற அந்த 1947 ஆகஸ்ட் மாதம் 15 தொடங்கி நமது நாடு குடியரசு நாடு என்று பிரகடனப்படுத்தப்பட்ட ஜனவரி மாதம் 26 ம் தேதி 1950 முதல் கடந்த முறை நடைபெற்ற இந்திய பாராளுமன்றத் தேர்தல்  2014 நடந்து முடிகின்ற வரை இந்நாட்டினில் வசித்துவருகின்ற அத்தனை மதங்களைச் சேர்ந்த ( பாரதிய ஜனதா கட்சி, RSS, மற்றும் இந்துத்துவா அமைப்பினர்களும் அவர்தம் வாடிக்கையாளர்களும்தவிர) கோடிக்கணக்கான இந்தியர்கள் அனைவருமே ஒருசேர,ஒன்றாக, கட்சி,மத,இன, மொழி, வேறுபாடுகள் எதேகிலும் இருப்பினும் அவற்றை மறந்து, சிந்தனை சுடர்தனில் இருந்து அகற்றி, இந்தியர்கள் அனைவரும் ஒரே இனம் என்ற தத்துவத்தின்படியே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அண்ணன் தம்பிகளாய் மாமன் மச்சான் போல மதங்களை,இனங்களை, மொழிகளைகளை, ஜாதி சமயங்களைக் கடந்து ஒற்றுமையாகவே மட்டும் வாழ்ந்து வந்த இந்தியர்கள் 2014 ம் ஆண்டு  நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை மட்டுமே அவர்களால், அப்படிப்பட்ட எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம் என்ற கொள்கை, கோட்பாடுகளின்படி ஒற்றுமையாக வாழ்ந்துவர முடிந்திருந்தது. வாழ்ந்தும்வந்தனர்.ஆனால், 2014 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாய் வெளிவர, வெளிவர, இந்தியத்திருநாட்டின் தலை எழுத்தை மாற்றி எழுதிடும் வகையில், அதுவரை 10 ஆண்டுகளாக இந்திய நாட்டினை ஆண்டு கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆளும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டு, பாரதீய ஜனதா கட்சி வெற்றிபெற்று ஆளும் பொறுப்புக்கு வர இருக்கிறது என்ற செய்தி கேள்விப்பட்ட உடனேயே என்போன்ற ஆதிகால இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து இனிவரும் இந்தியா இப்படித்தான் பீடுநடைபோடும், என்று கணிக்கும் ஆற்றலை,வல்லமையை தீர்மானமாக ஒரு முடிவாக எடைபோடுவோர்கள் வயிற்றில் இந்த பிஜேபி கட்சியின் வெற்றி புளியைக் கரைத்து குடித்தவன் வயிறு படும் பாடுபோல துடி துடிக்க ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம்.

ஆம் அன்புத்தமிழ் நெஞ்சங்களே!! இனிமேல் இந்த நமது இந்தியத் திருநாடு என்பது இந்துத்வா மத,இன,மொழி,ஜாதி,சமய, வெறியர்கள் கைகளில் மாட்டி, சிக்கி சிதறி சின்னாபின்னம் ஆகிவிடப் போகிறது என்று அன்று 2014ம் ஆண்டு நினைத்தபடி தற்போது மோடியின் அரசு, தனது 3 ஆண்டுகால அரசாட்சி நிறைவுபெற்று விட்ட பிறகும்கூட, விலைவாசி,வேலை இல்லாத இளைஞர்கள் ,அந்நிய நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திட இயலாத இந்த மோடியின் கையாலாகாத,தெம்பு,திராணி,வக்கு,வகையற்றுப்போய்விட்ட மத்திய அரசாங்கம், அந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பிட முடிவெடுத்து, அதன் பயனாக வந்ததுதான் இந்த " புனித ரம்ஜான் நோன்பு " துவக்க நாளன்று இந்திய ஒருமைப்பாடுக்கு வெடி வைத்திடும் வண்ணம் இந்திய நாட்டின் ஆளும் தலைமைப்பொறுப்பில் உள்ள நரேந்திர மோடி  பிரதமராக உள்ள மத்திய அரசாங்கம் அதன் ஒரு பகுதியான இயற்கை, சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் விலங்குகள் நல ஆணையத்தை உள்ளடக்கிய அமைச்சகத்திலிருந்து ஒரு அறிவிப்பாணை (Notification) வெளியானது.இது அரசாணைக்கு நிகரானது. ஆனால் நமக்கு வாய்த்த இளிச்ச வாய்வ முதல்வர் பழனியாச்சாமியோ இதை பேப்பரில் வருகின்ற செய்தி என்கிறார்.என்னே அவருக்கு ஆழ்ந்த அறிவு.

அதில் என்ன குறிப்பிடப்பட்டு உள்ளது என்று கேட்டால் இன்று முதல் (27-05-2017) சனிக்கிழமை முதல்(நாளைவிடிந்தால்இஸ்லாமியப்பெருமக்களின் " ரம்ஜான் "  நோன்பு துவக்கப்படும் நாள் என்று தெரிந்திருந்தும் ஆணவம் பிடித்த, இந்து வெறி பிடித்த மத்திய அரசு, RSS இயக்கத்திற்கு அடிமையாக ஆகிப்போனமத்திய அரசு, இந்த நாட்டில்ப் உள்ள சிறுபான்மையினரை எப்படியாகிலும் வெறுப்பேற்றி அவர்களை சாகடித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் மத்தியப்பேரரசு) இந்தியப்  பேரரசின் ஆளுமை எல்கைக்கு உட்பட்டுள்ள வடக்கே காஷ்மீரம் முதல் தெற்கே கன்னியாகுமரி வரையிலும் கிழக்கே அருணாச்சலம் மாநிலத்தின் கிழக்கு எல்லை கடைகோடி நகரம், மற்றும் நாகாலாந்து மாநிலத்தின் கடைகோடி கிழக்கு எல்லை வரையிலும் உள்ள பகுதி  முதல் மேற்கே குஜராத் மாநிலம் காந்திநகர் அதற்கும் மேற்கே உள்ள எல்லை வரையிலும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கால்டைநகளுள் மாடு,காளை, எருது. மற்றும் ஒட்டகம் ஆகிய (இந்த வகை விலங்குகளைத்தான் சிறுபான்மை இன மக்கள் சாப்பிடுகிறார்கள்- சாப்பிட முடியும், ஏன் என்றால் அதுதான் விலை ஆட்டுக் கறியை விடவும் பலமடங்கு குறைவானது என்ற ஒரே காரணத்தால்) நான்கு கால் விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அவைகள் இறைச்சிக்காக வெட்டப்படவோ, அல்லது ஓரிடம் இருந்து மற்றோரிடம் கொண்டு செல்லவோ மேலும்  இடம் மாறிக் கொண்டு செல்வதென்றாலும் அதிலும் ஏகப்பட்ட கெடுபிடிகள், சாதாரண ஏழை,நடுத்தர விவசாயிகள் செயல் படவே முடியாத அளவுக்கு சட்டங்களும் அதனை நெறிப்படுத்திடும் வழிமுறைகளும் இருக்கின்ற காரணத்தால், ஏழை மற்றும் நடுத்தர விவசாயப் பெருங்குடி மக்கள், சிறுபான்மையின மக்கள் சாக வேண்டும் என்ற ஒரே நோக்கில் இத்தகைiய அறிவிப்பாணை வெளியாகி இருக்கிறது.

 நாம் எத்தனை பிறவிகள் தவம் செய்தோமோ எனக்குத் தெரியவில்லை, இப்படி ஒரு இந்துத்வா வெறி பிடித்த ஒரு தாடியிடம் நமது நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறதே என்று எண்ணுகின்றபோது, கண்களில் வழிந்தோடும் கண்ணீரை துடைத்து வழித்தெடுக்க நான்கு லாரிகள் போதாது. 

சரி, இது இப்படியா, நேற்று (28-05-2017) ஞாற்றுக்கிழமை ரம்ஜான் நோன்பு ஆரம்பித்த இஸ்லாமியப் பெருமக்களுக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி பெருநாள் வாழ்த்து சொல்கிறாராம். 

இது எப்படி இருக்கிறது என்று கேட்டால், அன்புத்தமிழ் நெஞ்சங்களே !! 

பிள்ளையையும் கிள்ளி விட்டு !! தொட்டிலையும் ஆட்டிய கதை !!

என்று நம் சொல் வழக்கில் ஒரு பழமொழி ஒன்று உண்டு. அதனை மனதில் வைத்துத்தான் இந்தக் கட்டுரைக்கு :-

சாகடித்த வாய்க்கு !!சர்க்கரைப் பொங்கல் தந்த !!கதையால்ல இருக்குது !!

என்று தலைப்பு இட்டு உங்கள் அனைவரது கண்களுக்கு விருந்தாக, எண்ண சிந்தனை ஓட்டத்த்திற்கு மருந்தாக தந்துள்ளேன்.

பொறுமையாக படித்து உங்களது கருத்துக்களை விமர்சனங்களாக எனக்குத் தரவேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டு விடை பெறுகின்றேன் அன்புத் தமிழ் நெஞ்சங்களே.

நன்றி.வணக்கம்.

அன்புடன்.
கவிஞர் மதுரை. T.R.பாலு.

வியாழன், 11 மே, 2017

எள்ளுதான் எண்ணைக்கு காயணும் !! எலிப்புழுக்கை எதுக்காக காயணும் ? ( எடப்பாடி பழனிச்சாமிக்காக எழுதப்பட்ட கட்டுரை இது )





எள்ளு எண்ணைக்கு காயணும் !!
எலிப்புழுக்கை எதுக்காககாயணும் ?
( எடப்பாடி பழனிச்சாமிக்காக எழுதப்பட்ட கட்டுரை )


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் இனிய காலை நேரத்து
மனங்கனிந்த வணக்கங்கள் !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

நேற்றைய  தினம் மாலை 7-௦௦ மணி சன்
தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக்
கொண்டிருந்தபோது, நெஞ்சை பதற வைத்திடும்
விதமாக, செய்திச் சுருக்கங்கள் என்ற பகுதியில்
செய்தி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

அது என்னவென்றால், நேற்று  பகல் வேளை
சென்னை கோட்டை தலைமைச்செயலகத்தில்
மக்கள் நலம் சார்ந்த சில திட்டங்களை முன்னாள்முதல் அமைச்சர் மறைந்த " செல்வி " (? )J ஜெயலலிதா காணொளிக்காட்சியின் வாயிலாகதுவக்கி வைப்பது ஒன்றேதான் அவர் வழக்கமாககடந்த 2௦௦1-2௦௦6 மேலும் 2011-2016 செப்டம்பர் மாதம்20ம் தேதியில் சென்னை தலைமைச்செயலகத்தில்நடைபெற்ற மெட்ரோ இரயில் துவக்க விழாவினைக்கூட, இதுதான் அவர் ஜெ உயிருடன் கலந்துகொண்ட இறுதி பொதுநல விழா ஆகும். ( விழா நடைபெற்ற இடம் கோயம்பேடு மெட்ரோஇரயில் நிலையம் என்பது போயஸ் தோட்டத்திற்கு மிகஅருகாமையில் இருக்கும் இடம்தான் ) மறைந்த அல்லது
மறைத்துவிட செய்யப்பட்ட ( ? ) எது உண்மை என்பதைஇறைவன் ஒருவனே அறிந்திடுவான்.

ஆனால் அந்த மெட்ரோ இரயில் சேவை ஆரம்ப நிகழ்ச்சியை துவக்கிட  நேரில் வருகை தந்து விழாவினைத்துவக்கி வைத்திடும் அளவுக்கு உடல்நலம் மிகவும்கடுமையாக குன்றிப்போன காரணத்தால் மறைந்தமுதல்வர் ஜெயலலிதா அம்மையார் கோட்டை தலைமைச்
செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். ஆனால் இந்த மெட்ரோ இரயில் சேவைத்திட்டம் ஜெ + sசசி கும்பலுக்கு ஆரம்பம் முதலே பிடிக்காதது மட்டுமல்ல பகிரங்கமாக தங்களது எதிர்ப்பு நிலைப்பாடுகளை, பத்திரிக்கைகள் 
மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தி தங்களை  ஒரு BJP எதிர்ப்பாளர் என்று மேலோட்டமாக காட்டிக்கொண்டு, திரைமறைவில் பிஜேபி யுடன் அரசியலில் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டவரும் 
" செல்வி " (?) ஜெ என்பது யாவரும் தெரிந்ததே. 
இது மட்டுமல்ல, கிட்டத்தட்ட அவர் ஆட்சி புரிந்த கடந்த15 ஆண்டுகளாக ( ஐந்து, ஐந்து ஆண்டுகள் இடைவெளிவிட்டு- அதாவது 1991-1996, 2001-2006, 2011-2016 ஆக மொத்தம்பதினைந்து ஆண்டுகளும் அதன் பிறகு 2016 மே மாதம்பிற்பாதியிலிருந்து செப்டம்பர் 22 வரை கிட்டத்தட்டநான்கு மாதங்கள், அம்மையார் ஜெ அவர்களால், தொடர்ந்துபத்து நிமிடங்கள், நின்றுகொண்டே அரசியல்பணி  செய்திடும்ஆற்றல் இழந்தவர். அப்படிப்பட்ட உடல்நலம் மிகவும்கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த காரணாத்தால் மட்டுமே
அவரால்வீட்டிற்குள்மட்டுமேசெயல்பட்டுக் கொண்டிருந்தஒரு வயோதிகப் பெண்  ஜெ. பெகுமானமாக சுதந்திரமாகசெயல்பட இயலாத நிலைமையில் அவர் மக்கள் நலத் 
திட்டங்களை காணொளிக்காட்சி மூலம் செயல் படுத்தி துவக்கி வைத்தார் என்றால், அது ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயம்தான்.

ஆனால், இந்த எடப்பாடிக்கு என்ன கொள்ளை வந்தது ?
ஐயா நான் கேட்கவில்லை. உங்களுக்கு வாக்குகளை அளித்து உங்களை முதலமைச்சர் நாற்காலியில் அழகுற அமரவைத்து உங்களது நடவடிக்கைகளை கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்ரீமான் 
பொது ஜனம் கேட்கிறார்கள் இந்தக் கேள்வியை.
அதுதான், அந்தக் கேள்விதான் இங்கே கட்டுரைக்குத் தலைப்பாகத் தரப்பட்டு உள்ளது எனதன்புத் தமிழ் நெஞ்சங்களே.

எள்ளுதான் எண்ணைக்கு காய்கிறது !!
எலிப்புளுக்கை எதற்காக காய வேண்டும் !!

நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் தேக பலத்துடனும் இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி எதற்காக காணொளிக்காட்சி மூலம் செயல்படுகிறார் ?
இதுதான் அரசியல் ஆர்வலர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பேச்சாக உள்ளது. 

என்ன சரிதானே ரசிகர்களே. உங்களது விமர்சனத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

நன்றி. வணக்கம்.
அன்புடன். மதுரை. TR.பாலு.


செவ்வாய், 2 மே, 2017

மறைந்த ஜெ,இவரது தோழி சிறையில் இருக்கும் சசி, மற்றும் பணத்தாசை பிடித்த அனைத்து மக்களுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம் !!




மறைந்த ஜெ, மற்றும் அவரது தோழி சிறையில் இருக்கும் சசி,மற்றும் பணத்தாசை பிடித்து அலையும் அனைத்து மக்களுக்கும் இந்தக் கட்டுரை காணிக்கை !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

தனது இளம் வயதிலேயே (29) மறைந்த தமிழ் 
திரைப்படப் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை 
கல்யாணசுந்தரம், திரை உலகிற்கு எழுதிய 
முதல் பாடலின் உட்கருத்து, எனது மேலே 
குறிப்பிட்டு உள்ள கட்டுரையின் தலைப்பிற்கு 
மிகவும் வலு சேர்த்திடும் விதமாக உள்ளது 
எனது அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

நீங்களும் அதனைப் படித்து, பேராசைகளை 
( இருந்தால்) அகற்றி, மனிதனாக, வாழ்ந்திட 
இனிமேலாவது நாம் அனைவரும் முயற்சிப்போமாக !!

இனிமேல் பாடலைப் பார்ப்போமா நேயர்களே !!

இதோ, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்தப் பாடல் YouTube வலைதளத்தில், கீழ்க்கண்ட குறிப்புகளில் உள்ளது தனியாக அதனை பதிந்து "க்ளிக்" செய்து படித்தால், ஒலி ஒளி காட்சிகளோடு அந்தப் பாடலை நீங்கள் அனைவரும் கேட்டு மகிழ்ந்திடலாம்.

https://www.youtube.com/watch?v=BSNv9iPjD7M 

இந்த ஒலி ஒளிப்பேழையில் ( CD) இரண்டாவதாக இடம் பெறுகிறது அந்தப் பாடல்.
பாடலை தொகையறா வில் இருந்து சரணம் வரை நான் எழுத்து வடிவில் உங்களுக்கு தருகின்றேன்.( ஏதோ என்னால் முடிந்த ஒரு சமுதாயப்பணி) 

அன்புத்தமிழ்நெஞ்சங்களே!படித்துஇன்புறுங்கள்.

தொகையறா :-

குட்டி ஆடு தப்பி வந்தால் !!
குள்ள நரிக்கு சொந்தம் !!
குள்ள நரி மாட்டிக்கிட்டா ?
குறவனுக்கு சொந்தம் !!
தட்டுக்கெட்ட மனுதர் கண்ணில் !!
பட்டதெல்லாம் சொந்தம் !! ( ஜெ+சசி க்கு)
சட்டப்படி பாக்கப்போனா !!
எட்டடிதான் சொந்தம் !!

சரணம் :-

உனக்கெது சொந்தம் ? எனக்கெது சொந்தம் ?
உலகத்துக்கு எதுதான் சொந்தமடா "
மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே !!
வந்த லாபம் மதி மந்தமடா !!

                                                                            (உனக்கெது)

கூட்டிலே குஞ்சு பறக்க நினைத்தால் ?
குருவியின் சொந்தம் தீருமடா !!
ஆட்டிலே குட்டி ஊட்டு மறந்தால் ?
அதோடு சொந்தம்  மாறுமடா !!
நீட்டியே வைத்து !!-
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது !!-காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும்போது !!
நேசம்,பாசம்,பொருள் ஆசைக்கெல்லாம் !!
காட்டிய ஒரு பிடி வாய்க்கரிசியிலே !!
கணக்கு தீர்ந்திடும் சொந்தமடா !!

                                                                              ( உனக்கெது)

பாவச்சரக்குகளை பணத்தாலே மூடிவைத்து !!
பாசாங்கு வேலை செய்த பகல்வேஷக்காரர்களும் !!
ஆபத்தில் சிக்கி அழிந்தார்கள் ஆனாலும் !!
அடுத்தடுத்து வந்தவரும் !!
அவர்களுக்குத் தம்பியடா !! 
அவரும் வந்தார் !! இவரும் வந்தார் !!
ஆடினார் !! முடிவில் எவருக்குமே !!
தெரியாமே ஓடினார் !!
மனதில் இருந்ததெல்லாம் மறந்து !!
கண்ணை மூடினார் !!

செவரு வச்சுக் காத்தாலும் !!
செல்வமெல்லாம் சேத்தாலும் !!
செத்த பின்னே அத்தனைக்கும் !!
சொந்தக்காரன் யாரு ? -- நீ 
துணிவிருந்தால் கூறு ?
ரொம்ப எளியவரும் !!
பெரியவரும் எங்கே போனார் பாரு !!
அவர் எங்கே போனார் பாரு !!

அவரும் வந்தார் !! அவரும் வந்தார் !!
இவரும் வந்தார் !! ஆடினார் !!
முடிவில் எவருக்குமே தெரியாமல் ஓடினார் !!
மனதில் இருந்ததெல்லாம் மறந்து !!
கண்ணை மூடினார் !!

பொம்பள எத்தனை !! ஆம்பிள எத்தனை!!
பொறந்தது எத்தனை !! இறந்தது எத்தனை !!
வம்புலே மாட்டி போனதெத்தனை !!
மானக்கேடாய் ஆனதெத்தனை ?
மூச்சு நின்னா !! 
மூச்சு நின்னா !!  முடிஞ்சுதடி சொந்தம் !!--அடியே 
முத்துக்கன்னி இதில் எத்தனை எத்தனை ஆனந்தம் !!--அடியே 
முத்துக்கன்னி இதில் எத்தனை ஆனந்தம் !!
ஆனந்தம் !!

                                                                               ( உனக்கெது)
உனக்கெது சொந்தம்  ?  எனக்கெது சொந்தம் ?
உலகத்துக்கெதுதான் சொந்தமடா ?
மனக்கிறுக்கால் நீ உளறுவதால் !!
வந்த லாபம் மதி மந்தமடா !!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

மேலே குறிப்பிட்டுள்ள இந்தப்பாடல், 1950-1955 க்கு
இடைப்பட்ட காலகட்டத்தில் அந்தக்கால புரட்சி நடிகர், திமுக இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர், உண்மை பகுத்தறிவு இயக்க விரும்பி மறைந்த M.K.இராதா, திருமதி M.N.இராஜம் ஆகியோர் நடிக்க, இசை அமைப்பு மறைந்த இசை வேந்தர் G.இராமநாதன் ( இவரின் உதவியாளர் மறைந்த M.S. விஸ்வநாதன்) பாடலைப் பாடியவர், வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரர், கழகத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மாமா, மறைந்த சிதம்பரம் S.ஜெயராமன் பாடிட, வெளிவந்த 

                          " பாசவலை "

என்ற திரைப்படத்தில், மறைந்த திரைப்படப்பாட்டுக்கு ஒரு  தலைவன் புரட்சி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 
முதன்முதலாக எழுதி சிறப்பு பெற்ற ஒரு பாடலாகும். 

இந்த " பாசவலை " திரைப்படம் நாளை ( 03-05-2017) புதன்கிழமை கலைஞரின் " முரசு " தொலைக்காட்சியில், இரவு 07.30 மணிக்கு 
ஒளிபரப்பாகிறது என்ற விபரத்தையும் என் அன்பு வாசகர்களின் இனிய கவனத்திற்கு கொண்டு சென்று பதிவு செய்கிறேன்.

அனைவரும் தவறாமல், இந்த மேலே குறிப்பிட்டுள்ள அந்த வரலாற்றுச்சிறப்புமிக்க பாடல் காட்சியை மட்டுமாவது கண்டு,
கேட்டு, மகிழ்ந்திடுங்கள் !! என்று கூறி, உங்கள் அனைவரிடமும் இதயம் கனிந்த நன்றிகளையும் வணக்கங்கள் !! வளமுடன் !! நலமுடன் !! அன்புடன் !!தூய தமிழ்ப் பண்புடன்.

உங்கள் அன்பன்,

கவிஞர் மதுரை T.R.பாலு.

வணக்கம் !! அன்பு வாசகர்களே !!

வியாழன், 13 ஏப்ரல், 2017

எல்லோருமே கூட்டுக்களவாணிகள் தான் !! --தமிழக தற்கால அரசியல் நிலவரக் கட்டுரை !!




எல்லோருமே கூட்டுக்களவாணிகள்தான் !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் இதயம் கனிந்த வணக்கம்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

இன்றையதினம் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் உற்றுப்பார்த்திடும் வேளையில் தமிழக வாக்காளப் பெருமக்களது சிந்தையில் உதித்த விஷயம்தான் இங்கே கட்டுரைக்கு தலைப்பாகத் தரப்பட்டுள்ளது



எல்லோருமேகூட்டுக்களவாணிகள் தான் !!


இதனை சற்றுவிரிவாகப் பார்ப்போம் நேயர்களே . கடந்த ஆண்டு 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ம் தேதி இரவு 09.30மணிவரை, தாழ்ந்த தமிழ்நாடு ( எப்போது நமது தலைநிமிர்ந்திருந்த தமிழ்நாடு, நடிகரையும்,( MGR) அவரது சாவிற்குப் பிறகு இடையே  சில ஆண்டுகள் கழித்து அதாவது  1991-1996, 2௦௦1-2௦௦6, 2011-2016 ஆக 15 ஆண்டுகள், அதனைத்தொடர்ந்து 2016 மே மாதம் நடந்த சட்டமன்றத்தேர்தலில் தில்லுமுல்லுகள் பலசெய்து தேர்தல் ஆணையத்தையும் 
காவல் துறை ( அது ஜெ யின் ஏவல்துறை ஆகிப்போனது வேற விஷயம்)மற்றும் அதிகார வர்க்கம் அனைத்தையும் தனது காலில் போட்டு 
நசுக்கி ஜனநாயகத்தை, மக்கள் ஆட்சித் தத்துவத்தை கொன்று கிணற்றில் போட்டு பாமர, ஏழை கிராம மக்களைக் கவர்ந்திடும் வகையில் அவர்களது வாக்குகளைப்பெற அவர்களது ஒவ்வொரு வாக்கிற்கும்ஆயிரக்கணக்கில் பணம் தந்து, பரிசுப்பொருட்கள் வழங்கி, பிரியாணி பொட்டலம், மற்றும் குவாட்டர் பாட்டில் வழங்கி பெருமை அடைந்து, அநியாய முறையில் வெற்றியும் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திட்ட  புரட்டுத்தலைவரது அன்பிற்கு 
பாத்திரரான ஆசை நாயகியையும் ( ஜெ ) தமிழகத்தினை ஆளச்செய்து அழகு பார்த்தார்களோ இந்த தமிழக வாக்காளப் பெருமக்கள், அன்று தலை தாழ்ந்தது, இன்று வரையிலும்தலை நிமிர்ந்திடவேமுடியவில்லை)
அமைதியாகத்தான் இருந்தது. அதன்பின்பு தொலைகாட்சிகள் அனைத்திலும் வெளிவந்த "இடைமறித்த செய்திகள்" (BREAKING NEWS) என்ன என்று பார்த்தால், கேட்டால் அது 
உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜெ மருத்துவ மனையில் ( அப்போலோ)அனுமதிக்கப்பட்டு அதன்பின்பு சுமார் 75 நாட்கள் வரையிலும் என்ன 
நடந்தது, என்னதான் நடந்தது, யாருக்குமே தெரியாது. இத்தனைக்கும் இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்தியத் 
தலைவர் திரு. அமீத் ஷா, இந்தியப் பேரரசின் நிதி அமைச்சர் திருமிகு அருண் ஜேட்லி தொடங்கி, ராகுல் காந்தி, பல்வேறு மாநில முதல்வர்கள்,
ஆளுனர்கள், நமது தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுனர்திரு. வித்யாசாகர் ராவ் அவர்கள்   ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை கிரீம்ஸ் சாலையில் உள்ள அந்த 
அப்போலோ மருத்துவமனைக்கு சென்றிருந்தும், அது போலவே நமது தளபதியவர்கள்  தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு 
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அத்தனை தலைவர்கள், புது டில்லியில் இருந்து ஜெ வை 
சோதிக்கவந்திருந்தஎய்ம்ஸ்மருத்துவமனையின் சிறப்புமருத்துவர்குழு,இலண்டன் மாநகரிலிருந்து வந்த சிறப்பு மருத்துவர் திரு.ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் நாட்டினின்று வருகை தந்த சுவாச நோய் நிபுணர்கள், இவர்கள் அத்தனைபேரையும் அவர்கள் தருகின்ற, தந்த, மருத்துவ ஆலோசனைகள்,வழிகாட்டுதல்கள், இவை இத்தனையும் ஒருபுறம் நடந்திருக்க,
மறுபுறம், ஆருயிர் தோழி, மன்னார்குடி மாபியா கும்பலின் தலைவி,ஜெ ஆட்சி புரிந்த நான் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டு 
இருந்த அந்த 15 ஆண்டுகள், அதன் பின்னர் 2016 மே மாத வெற்றி முதல் அம்மையார் ஜெ மறைந்த அந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி 
( என்று சொல்கிறார்கள். உண்மையான இழவு விழுந்ததேதி எது என்று அந்த எமன் ஒருவனே அறிவான்) வரைக்கும் சரி, முழுக்க முழுக்க அரசு இயந்திரத்தை, தனது மேற்பார்வையின் கீழ் seyalpadachcheithavar தன் 
பின்னர் கும்பலின் தலைவி அந்த கட்சிக்கு பொதுச்செயலாளர்
பதவி ஏற்று திரு. OPS பேருக்கு முதல்வராக (செயல்படாமல்) 
செயல்பட்ட காலம் வரையிலும் சரி, அதன் பின்பு கும்பல் 
தலைவிக்கும் OPS இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பதவிச் 
சண்டையின் காரணமாக, புதைகுழி முன்பாக அமர்ந்து ஞானம் 
பெற்றாராம் OPS எப்படி புத்தர் பெருமான் போதிமரத்தின் அடியில் 
அமர்ந்தவுடன், ஞானம் பெற்றாரோ அது போல இந்த கொள்ளைக் 
கும்பலின் ஊதுகுழலாக செயல்பட்ட OPS இத்தனை காலமும் 
அதாவது நமது தளபதி நேற்றையதினம் சென்னை: புது வண்ணாரப்பேட்டை 
RK நகர் இடித்தேர்தல் இரத்து கண்டன பொதுக்கூட்டத்தில் 
சொன்னதுபோல ஜெ.மு மற்றும் ஜெ.பி அதாவது அம்மையார் ஜெ
சாகடிக்கப்பட்டதற்கு முன்பு (ஜெ.மு) சாகடிக்கப்பட்டதற்கு பின்பு (ஜெ.பி)
இன்றைக்கு உத்தம புத்திரன் வேடம் தரிக்க முற்படும் ஓபிஎஸ்,
மாபியாக் கும்பலின் தலைவி, மத்திய அரசு, அதன் பிரதமர் மோடி,
பாரதீய கட்சியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா, மத்திய 
அரசாங்கத்தின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, எய்ம்ஸ் மருத்துவமனை 
மருத்துவர்கள், இலண்டன் மருத்துவர் திரு.பீலே, சிங்கப்பூர் 
நாட்டின் மருத்துவர்கள் குழு, இவர்கள் இத்தனை பேரின் மானசீக 
ஒத்துழைப்பு இல்லாமல், ஜெ க்கு என்ன நடந்தது, என்னதான் 
நடந்தது ?என்பதை யாருக்கும் தெரியவிடாமல், தடுத்தது யார்?
வாக்குகளை நல்கிய ஸ்ரீமான்பொதுஜனம் என்ன வக்கத்த சமூகத்தினரா? 
தரங்கெட்ட, தகுதியற்ற நடிகையை எல்லாம் தேர்ந்தெடுத்து  ஆள்வதற்கு 
அனுமதியளித்த அவர்கள் என்ன அனாதை நடைபிணங்களா ?
கேட்கிறார்கள் கேள்விகள் பொதுமக்கள்.  பதில் சொல்ல தெம்பு,
திராணி,வக்கு,வகை, இருக்கிறதா மாபியாகும்பல் தொடங்கி, மேலே 
குறிப்பிட்டிருந்த அத்தனை பிரிவு நபர்களுக்கும் ?
நிச்சயம் கிடையவே கிடையாது !! ஏனென்றால் இவர்கள் அத்தனை 
பேருமே கூட்டுசேர்ந்துதான் ஜெ மரணத்திற்கு சங்கு, சேகண்டி
அடித்து ஆதரவு அளித்தவர்கள், இவர்கள் அனைவருமே யோக்கியர்களா ?
இல்லை இல்லவே இல்லை இவர்கள் அத்தனைபேருமே கட்டுரையின் 
தலைப்பில் குறிப்பிட்டு உள்ளதைப்போல :- 

எல்லோரும் கூட்டுக்களவாணிகள் !!

என்று, நிச்சயம் கட்டுரையின் அமைப்பாளர் நான் கேட்க வில்லை,
நான் அப்படி, அவதூறாக பேசிடவும் இல்லை. இந்தக் கட்டுரையில் 
குறிப்பிட்டுள்ள அத்தனையுமே தமிழக மக்கள், ஆங்காங்கே நான் 
சந்திக்கின்றபோது, அவர்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் 
பேசிக்கொண்ட கருத்தை மட்டிலுமே நான் இங்கே பதிவு செய்துள்ளேன்.
இந்தக் கட்டுரையின் ஒட்டு மொத்த சாராம்சம் அனைத்துமே தமிழக 
வாக்காளப் பெருமக்களின் உள்ளக்குமுரலின் வெளிப்பாடு மட்டுமே.

மற்றபடி, எனக்கும் இந்தக் கருத்துக்களுக்கும் யாதொரு தொடர்போ,
அல்லது ஒப்புக்கொள்ளும் அபிப்பிராயமோ, எதுவுமே இல்லை...இல்லை...
இல்லவே இல்லை.. என்று கூறி மீண்டும் அடுத்த பதிவில் உங்கள் 
அனைவரையும் சந்திக்கிறேன்.

நன்றி !!  வணக்கம்  !!

அன்புடன்.
கவிஞர். மதுரை. T.R.பாலு.

சனி, 4 பிப்ரவரி, 2017

மித்திர பேதம் !! பஞ்சமா பாதங்களுள் இதுவும் ஒன்று !! மன்னார்குடி மார்பியா கும்பலே !! தெரிந்துகொள்ளுங்கள் !!




மித்திர பேதம் !! பஞ்சமா பாதகங்களுள் இதுவும் ஒன்று !!
மன்னார்குடி மார்பியா கும்பலே !! தெரிந்து கொள்ளுங்கள் !!



அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் இனிமை நிறைந்த காலை
வணக்கங்கள் !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தின்
கடைசி நாளில் அவை நடுவரால் ( திரு. தனபால் அவர்கள் இந்த பதவிக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர்தான் )நடப்பு  சட்டமன்றத்திற்கு  அனைத்துநிலைக்குழுக்களும் 
( மிக மிக காலதாமதாக)அறிவிக்கப்பட்டுள்ள
சூழலில், எந்த குழுவிற்கும் திமுக வுக்கு என்று
உள்ள பெரும்பான்மைக்கு மதிப்பும் மரியாதையும்தந்திடாத வகையில், தரக்கூடாது என்ற இறுமாப்புடன்இணைந்த நிலையில், என்ன கட்டையை வைத்துக்கட்டினாலும் நாய் வாலை நிமிர்த்திட இயலவேஇயலாது !! என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தனபால்
செயல்படுவதைப் பார்த்தால், இப்படி ஒரு கொத்தடிமை,கோணவாய் இருந்தும் பேசிட இயலாத நிலைதனில் தனபால்வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம்.
இந்த நிலையை எண்ணி அழுவதா !!இல்லை சிரிப்பதா !!என்ற தெரியவில்லை.

அதிலும் குறிப்பாக, சட்டமன்றத்தின் பொதுக்கணக்குகுழுவின் தலைவராக, மரபின்படி எதிர்கட்சித் தலைவர்மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும் என்ற நியதியை
( Protocol) மீறி அந்தப்பதவி காங்கிரஸ் கட்சியின் 
குழுத்தலைவர் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. K.R.இராமசாமி அவர்களுக்கு (மன்னார்குடி மார்பியா குழுத்தலைவி ஆயாம்மா சசிகலாவின் உத்திரவுப்படியும் மேலும்இவரது இரண்டாவது கணவர் M.நடராஜனின் ஆலோசனைப்படியும்) வழங்கப்பட்டு உள்ளது. 

இதன்மூல காரணம் என்ன ? என்று நாம் ஆராய்ந்து பார்த்தோமென்றால், திமுக விற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேஉள்ள தோழமை நிலையை எப்படியாவது உடைத்து எறிந்திட வேண்டும் இது முதல் குறிக்கோள்,

இரண்டாவதுகுறிக்கோள், இதன்மூலம் மறைந்த ஜெயலலிதாவின் " அன்பிற்கும் -- பாசத்துக்கும் " உரியவராக இருந்து கடந்த 21-05-1991 தமிழக சட்டமன்ற தேர்தல்பரப்புரை அன்று இரவு காங்கிரஸ்-ஆய் அதிமுக கூட்டணி தேர்தல் பொதுக் கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதாவும் கலந்து கொள்வதாக இருந்தது-அன்று இரவு ராஜீவ் +ஜெயலலிதா "தனிப்பட்ட முறை சந்திப்பு" நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் ஜெயாவுக்கும் மறைந்த கருப்பையா மூப்பனார் மற்றும் வாழப்பாடி இராமமூர்த்தி ஆகியோர் அனைவருக்கும் விடுதலைப்புலிகள் இயக்க இரகசிய தகவல் தரப்பட்டதால், ஜெயலலிதா அந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்து, ஒசூரிலேயே தங்கிக்கொண்டார் ஜெயலலிதா. மூப்பனார்,இராமமூர்த்தி இருவரும் ராஜீவ்காந்தி தன்னந்தனியே விட்டு விட்டு மேடைநோக்கி சென்று விட்டார்கள்.)அதன் காரணத்தாலேயே கடந்த 21-05-1991 ம் ஆண்டு  தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்த்திட ஸ்ரீபெரும்புதூர்  வருகை தந்து தனது இன்னுயிரை இழந்த ராஜீவ்காந்தியின் அருந்தவப்புதல்வன் 
காங்கிரஸ் கட்சியை தனது காலத்தில் எப்பாடு 
பட்டாவது மரணக்குழியில் தள்ளியே தீருவேன் 
அது ஒன்றே தனது இலட்சியம் என்று எண்ணி 
செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் பாடவகுப்பின் Pre-KG பாலபாட வகுப்பில் இப்போதுதான் சேர்ந்து படித்துவருகின்ற ராகுல்காந்தியின் அன்பையும் ஆதரவையும் பெற்று ( இதற்கு தற்போது காங்கிரஸ் 
கட்சிக்கு தலைமை பதவி ஏற்றுள்ள திருநாவுக்கரசுஒரு மிகவும் முக்கியமான காரணம்) எதிர்வரும் காலங்களில், தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ( இப்படி முயற்சி செய்வதன் மூலமாக தங்கள்மீது தீராத உட்பகை கொண்டு, தங்களை வழக்கு மற்றும் கொள்ளை அடித்து சேர்த்து வைத்துள்ள 
சொத்துக்கள் இவைகளை எந்த நேரத்திலும் பறிமுதல் செய்திட தயாராக காத்துக்கொண்டிருக்கும் இந்தியத் திருநாட்டின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி 
அவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தித்தரும் 
வண்ணம் ஆயாம்மா சசிகலா செயல்படுகிறார் 
என்பதில் அரசியல் ஆர்வலர்களுக்கு எள்ளின் 
முனையளவு கூட சந்தேகம் இல்லவே இல்லை 
இதுதான் உண்மை நிலை.

மனிதன் நினைக்கின்றான். இறைவன் செயல்படுத்துகிறான்.இதுதான் எதிர்காலம் நமக்கு கற்றுத்தர காத்திருக்கும் பாடம். 

இதையேதான் ஆங்கிலத்தில் சொல்வார்கள் :-

Man proposes !! GOD disposes !!  

என்று.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மறைந்த புரட்டுத்தலைவர் காலத்திற்குப் பிறகு, ஜெயா காலத்தில் ஒன்றிரண்டு முறை காங்கிரஸ் கட்சி ஆய் அதிமுகவோடு கூட்டு சேர்ந்து அதனால் சொல்லொண்ணா துயரமுற்று துன்பப்பட்டு 
அவமானப்பட்டு, சோனியா எடுத்த முடிவு இனிமேல் எந்தக்காலத்திலும் இந்த ஆய் அதிமுக வோடு கூட்டு சேரவே கூடாது என்று முடிவெடுத்து அதனால் தான் கடந்த 2004ல் நடந்தேறிய மக்களவைத்தேர்தல் காலம் 
முதற்கொண்டு இப்போதுவரை, சோனியாவின் 
ஆலோசனைப்படிகாங்கிரஸ்கட்சி,திமுகவுடன் 
மட்டுமேகூட்டணி வைத்து பல சட்டமன்றத் தேர்தல்கள், நாடாளுமன்றத்தேர்தல்கள் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளை இங்கே 
சந்தித்துள்ளது.

இந்த நிகழ்வுகளால்,திமுகவும் காங்கிரஸ் கட்சியும் சகோதரர்களாக, ( மித்திரர்களாக) ஒன்றிணைந்து இதுவரை இணைந்தே இயங்கி வந்த சூழலில், இந்த இணைப்பினைக் 
கெடுக்க வேண்டும், அவர்கள்  இருவரது உறவினை நசுக்கிட வேண்டும் என்ற மன்னார்குடி மார்பியா கும்பலின் தலைவி 
சசிகலா மற்றும் அவரது இரண்டாவது கணவர் இந்த சதிகார படைத்தளபதி M. நடராஜன் இருவரது  சதிகார எண்ணங்களின் 
வெளிப்பாடுதான் சட்டமன்ற பொதுக்கணக்குக் குழுவிற்கு திமுகவிற்கு தர வேண்டிய அந்த மதிப்பு மிக்க பதவியை, எண்பத்தி ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்துள்ள 
திமுகவை புறந்தள்ளி, வெறும் எட்டு உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்த மதிப்பு 
மிக்க பதவியை மன்னார்குடி மார்பியா கும்பல் தந்து இருக்கிறது என்று சொன்னால், அதற்கு இங்கே மேலே விரிவாகவும், விளக்கமாகவும் சொல்லப்பட்டுள்ள காரணங்கள் தவிர வேறு எதுவும் இல்லை. 

எனவேதான் இந்தக் கட்டுரைக்கு நான் தந்துள்ள தலைப்பு :-

மித்திர பேதம் !! பஞ்சமா பாதகங்களுள் ஒன்று !!

இந்த மிக நீண்ட கட்டுரையைப்படித்து சிறப்பிக்க வேணுமாய் அனைவரிடமும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டு இந்த கட்டுரையை நான் இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

இத்தனை நாள் என்ன செய்துகொண்டு இருந்தது மத்திய அரசின் வருமானவரித்துறை ?



இத்தனை  ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தது ?
மத்தியஅரசின்வருமானவரித்துறை?




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அனைவருக்கும் காலை வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

கடந்த ஒருவாரமாக, தமிழகத்தில் மிகவும்
பரபரப்பாக ஊடகங்கள், பத்திரிக்கைகள் இவை
அனைத்திலும் பேசப்பட்டு,எழுதப்பட்டு வரும்
விஷயம் கருப்புப்பண வேட்டை, மற்றும் தமிழக
உயர்மட்ட அரசு அதிகாரிகள் (IAS தகுதி பெற்ற)
தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அத்தனை
நபர்களின் வீடுகள், அவர்களின் உறவினர்கள்
மற்றும் நண்பர்கள், அனைவரின் வீடு,மற்றும்
அலுவலகங்கள் உட்பட எல்லா இடங்களிலும்
இரவு,பகல் என்று பாராமல், தேடுதல் வேட்டை
நடைபெற்ற செய்தி நாடெங்கும் அதிர்வலைகளைஏற்படுத்தி உள்ளது. 

இது ஒரு காலம் தாழ்த்தியநடவடிக்கைதான் என்றாலும் வரவேற்போம்.

அதுசரி, ஐயா பிரதமர் மோடிஜி அவர்களே , இதே தமிழ்நாடு அரசு உயர்அதிகாரிகளின் ஒப்புதலோடுதான் , மணல் கொள்ளை
உள்ளிட்ட, பல்வேறு முறைகேடுகளின் வாயிலாக (இப்போது மறைந்த) அம்மையார் ஜெயலலிதா ஆட்சி புரிந்த கடந்தஐந்து ஆண்டுகளும் இதே நிலைதானே இங்கே
நீடித்துவந்தது. அப்போதெல்லாம் எதிர்கட்சிகள்
கத்தோ கத்துதென்று கத்தியும், நீங்களும் சரி, உங்களது ஆளுகைக்கு உட்பட்ட வருமனவரித்துறையும் சரி, CBI இத்யாதி இத்யாதி அனைத்துத் துறைகளும் அப்போதெல்லாம்எந்தவிதமான சோதனை நடவடிக்கையிலும்ஈடுபடாமல், இப்போது அம்மையார் ஜெ மறைந்தபிறகு உங்க நடவடிக்கைகளை ஆரம்பித்ததன்
உள்நோக்கம் என்ன ? சத்தியமா நான் கேக்கலைங்கோ,கேட்கிறார்கள் ஸ்ரீமான்
பொதுஜனம். அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்என்றால், மறைந்த அம்மையார் ஜெ உங்களோடவணிக பங்குதாரர் (அதாவது அவர் அடிக்கும்கொள்ளையில், உங்களுக்கும் சரிவிகித பங்குதரப்பட்டுள்ளது) எனவே அவர்உயிரோடு இருக்கும்வரை, எந்தவிதமானசோதனை நடவடிக்கைகளையும் மோடிஜிநீங்க எடுக்கலையாம். இத்தக்கூட நான் சொல்லலஜிபொதுமக்கள்தான்  பேசிக்கிறாங்க. 

அதுபோல இப்பநீங்க நடவடிக்கை எடுத்ததுக்கும் ஒரு காரணம்இருக்குதாம். என்னன்னு கேட்டீங்கன்னா  திரு மோடிஜி அவர்களே இந்த
பொம்மை OPS தலைமையில் உள்ள ஆட்சியை உங்களுக்குஆமாம் சொல்ல வைக்க நீங்க எடுத்த அதிரடிவைத்தியம்தான் இந்த கைது,சோதனை, பறிமுதல்இத்தியாதி நடவடிக்கைகள் எல்லாமாம். ஒழுங்கா நீங்க
சொல்றத கேட்டு அவங்க (OPS) பொம்மை மந்திரிசபை நடந்தாவெறும் சோதனையோட நிறுத்திக்குவீங்களாம்அப்படி இல்லன்னு சொன்னா, அடுத்தகட்டநடவடிக்கையான, கைது,வழக்கு,தண்டனைஅப்டி இப்டின்னு போவீங்களாம். இத்தக்கூடநான் சொல்லலஜி. பொதுமக்கள் பேசிக்கிறாங்க.

என்ன எழவோ, உங்கட்ட ஆட்சி,அதிகாரம்
இருக்கு நீங்க என்ன வேணும்னா செய்யலாம்.

ஆனா ஒன்னு, நீங்க குன்னக்குடிக்கு அன்னக்காவடிஎடுத்தாலும், இங்க தமிழ்நாட்டுலே உங்க பருப்புஒன்னும் வேகாதுஜி வேகவே வேகாதுஜி. 

இங்கஒரு மாபெரும் சக்தி இருக்கு அதுதான் முத்தமிழ்அறிஞர் தமிழினத்தின் ஒரே ஒரு காவலர் தலைவர்கலைஞர்ஐயா, அவரது அரசியல் வாரிசு தளபதி திரு.. மு.க.ஸ்டாலின், இவங்க எல்லாம் இருக்குற வரைக்கும்
நீங்க பேசாம தேசாந்திரம் ( பரதேசம்- காசி யாத்திரை )போக வேண்டியதுதான்.

என்ன..நான்..சொல்றது..சரியாஜி.
புரிஞ்சுக்குங்க. வரட்டா ?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. TR.பாலு.