வியாழன், 3 செப்டம்பர், 2015

செயலலிதா செயல் நியாயம்தானா நீ சொல்லு !!







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

சுமார் பத்து அல்லது பதினைந்து தினங்களுக்கு 

முன்பாக செயலலிதா சட்டமன்றத்தில் ஒருபுதிய 

அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அது என்ன 

என்றால், மறைந்த நடிகர் திலகம் 

சிவாஜிகணேசன்  நினைவாக மணிமண்டபம் 

ஒன்றினை அரசாங்க செலவில் அமைக்கப்படும் 

இதுதாங்க அறிவிப்பு.


இதோட உள் அர்த்தத்தை தெரியாத பல்வேறு 

தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த 

செயலலிதாவை ஆகா என்றும் ஓகோ என்றும் 

பாராட்டி மகிழ்ந்தனர். அப்போது ஒன்றும் கருத்து

சொல்லாமல்,இதன்உள்அர்த்தத்தினைஇரண்டே 

இரண்டு பேர்கள் மட்டும் ஆராய்ந்தபடியே 

மவுனம் காத்து இருந்தனர். 

அந்த இரண்டு பேர் யார் என்று 

உங்களுக்குத் தெரியுமா ? 

அவர்கள் வேறு எவரும் அல்ல.


1)  தமிழ் இனத் தலைவர் முத்தமிழ் அறிஞர்      தலைவர் கலைஞர் அவர்கள்.

2)  இந்தக் கட்டுரையை வடித்து உங்களுக்கு       அளிக்கக் காத்திருக்கும் நான்.

நாங்க நினைச்சபடியே மூன்று தினங்களுக்கு 

முன்பாக, சென்னை கடற்கரை சாலையில் 

உள்ள சிவாஜிகணேசன் சிலை கட்ட உள்ள 

அவரது மணிமண்டபம் முன்பாக நிறுவப்படும் 

என்று ஆணவம், திமிர்,மற்றும் கொழுப்பு ஆகிய 

மூன்று குணங்களின் வெளிப்பாடுகளையே 

தனதுஉண்மை குணங்களாக கொண்டு 

செயல்படும் அந்த பெண்மணி 

( இப்படி எழுதிடவே எனது கை கூசுகிறது. 

பேய்ராணி என்றுதான் எழுதிட வேண்டும்)

அறிவித்து உள்ளார்.  இந்த அரசியல்வாதியின் 

இப்படிப்பட்ட கபட செயல் என்பது 


நியாயம்தானா நீ சொல்லு ?


நன்றி.வணக்கம்.

இவண்.

உண்மைத் தமிழ் நேசர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக